தேசிய போசாக்கு மாதம் 2025
- Get directionsதேசிய போசாக்கு மாதம் – ஆனி 2025
தொனிப்பொருள்: “காய்கறிகள் மற்றும் பழங்கள்: எப்போதும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்”
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் ஏற்பாடு செய்யப்படும் தேசிய போசாக்கு மாதம் 2025, இந்த ஆனி மாதம் “காய்கறிகள் மற்றும் பழங்கள்: எப்போதும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்;” என்ற தொனிப்பொருளிpன் கீழ் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த முயற்சியானது, பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், இலங்கை முழுவதும் நிலையான, சத்தான உணவுப் பழக்கங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இலங்கை தொடர்ந்து போசாக்குக் குறைபாட்டின் மூவகச் சுமையை எதிர்கொள்கிறது- குறை போசாக்கு ,அதி போசாக்கு மற்றும் நுண் ஊட்டச்சத்துக் குறைபாடுகள். அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை தவறாமல் உட்கொள்வது, நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் கணிசமாகக் குறைத்து, ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆதரிக்கும். இருப்பினும், தற்போதைய நுகர்வு அளவுகள் தேசிய பரிந்துரைகளை விட மிகவும் குறைவாகவே உள்ளன.
இந்த ஆண்டு பிரச்சாரம், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தங்கள் அன்றாட உணவுமுறைகளை மேம்படுத்தவும், ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளை ஊக்குவிக்கும் சூழல்களை உருவாக்கவும் அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தும்.
முக்கிய நோக்கங்கள்:
1. பழங்கள் மற்றும் காய்கறிகளின் ஆரோக்கிய நன்மைகள் குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரித்தல்.
2. தனிநபர்கள், குறிப்பாக குழந்தைகள், தங்கள் அன்றாட உணவில் இவற்றை அதிகமாகச் சேர்க்க ஊக்குவிக்கவும்.
3. பழங்கள் மற்றும் காய்கறிகளை எளிதாக அணுக உதவும் சூழல்களுக்காக அங்கீகாரமளித்தல்;.
முக்கிய செய்திகளாக உள்ளடக்கியவைஇ
1 “ஒரு நாளைக்கு ஐந்து ” எனும் பழக்கத்தைக் கைக்கொள்வோம்; – தினமும் குறைந்தது இரண்டு காய்கறிகள், ஒரு பச்சை இலை வகை, மற்றும் இரண்டு பழங்கள் உள்ளடங்கிய ஐந்து பரிமாறல் அளவுகளிற்குப் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொளவோம்.
2. காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதற்குத் தயார்படுத்தும் போது அவைகளின் போசாக்குப் பெறுமானத்தினைப் பாதுகாக்க அவற்றினைக் கடுமையாக வேகவைப்பதனையோ அல்லது பதப்படுத்துவதனையோ தவிர்ப்போம்.
3. குறைந்த விலை கொண்ட உள்ளூர் பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தேர்வு செய்வோம்: பருவகாலங்களிற்கேற்ப கிடைப்பதால் அவை இயற்கையான போசாக்குச் சமநிலையையினை வழங்குவதுடன், உட்கொள்ளும் உணவு நானாவித உணவாக அமையவும் உதவும்.
4. பழங்கள் மற்றும் காய்கறிகளை ஆரோக்கிய சிற்றுண்டிகளாக உட்கொள்வோம்.
காய்கறிகளும் பழங்களும் சத்தான, மலிவான, தரமான உணவின் அடிப்படை ஆதாரமாகும். எனவே, அவற்றை உங்கள் அன்றாட உணவில் கட்டாயம் சேர்த்து, முழு குடும்பத்திற்கும் ஆரோக்கியமான எதிர்காலத்தை பரிசளிக்க இன்றே நடவடிக்கை எடுங்கள்.
மேலதிக தகவல்களுக்கு 011-2368320/21/23 என்ற தொலைபேசி எண்ணில் சுகாதார அமைச்சின் போசாக்குப் பிரிவைத் தொடர்பு கொள்ளவும் அல்லது ரெவசவைழைnஉழழசனiயெவழைn;பஅயடை.உழஅ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.